அன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் மூத்த மகன் நெடுநாட்களாக குடிக்கு அடிமையாகி குடும்பத்திற்கு பாரமாக இருந்து வந்தான். அவனை காதலித்து கரம் பிடித்த மனைவியும், அவனையே நம்பியிருக்கும் இரண்டு குழந்தைகளும், இதனால் மிகவும் துயரமடைந்து வந்தார்கள். இந்த நிலையில் நான் தங்களிடம் அமிர்ததரா மஹா மந்திர தீட்சை எடுத்துக்கொண்டு அவனுக்கான சங்கல்பம் செய்து தொடர்ந்து மந்திர ஜெபம் செய்து வந்தேன். இப்போது அவன் குடியை குறைத்திருக்கிறான். ஒரு வேலைக்கும் செல்ல துவங்கியிருக்கிறான். அவனது மாற்றம் எங்கள் அனைவருக்கும் மகிழ்வாக இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு நல்ல விடியலை காட்டியது உங்களது மந்திர தீட்சை என்பதை நான் மனதார நம்புகிறேன். நீங்கள் நீடுழி வாழ இறைவனை வணங்குகிறேன்.
இப்படிக்கு,
எலிசபெத் ராணி,
நாசரேத்,
நெல்லை மாவட்டம்.
அன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். எனக்கு வெகு நாட்களாக மன அழுத்த நோய் இருந்து வந்தது. இதை நீக்குவதற்கு வழி தெரியாமல் தவித்தேன். நான் வேற்று மதத்தை சேர்ந்தவன் என்பதனால், தயக்கத்தோடு உங்களிடம் மந்திர தீட்சை கேட்டேன். பெரிய மனதோடு எனக்கு அமிர்த தாரா மஹா மந்திர தீட்சை கொடுத்தீர்கள். இப்போது எனக்கு நல்ல உறக்கம் வருகிறது. மனதில் தெம்பும் இருப்பது போல் தெரிகிறது. இனி என்னால் தேறிவிட முடியும் என்று நம்பிக்கை வந்திருக்கிறது. உங்களுக்கு கோடான கோடி நன்றி.
இப்படிக்கு,
ராபர்ட் வின்சன்ட்,
குடியாத்தம்.
அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் உங்களை சந்திக்கும் முன்பு நிறைய மனக் குழப்பத்தில் இருந்தேன். இரவு உறக்கம் இல்லாமல் கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தியது. பகலிலும் என்னை யாரோ பின் தொடர்வது போலவும், கண்காணிப்பது போலவும் இருந்தது. பேய் பிசாசுகளின் தொல்லையா? மனநோயா? என்று குழம்பி வந்தேன். என் குடும்பத்தாருக்கு நான் ஒரு சுமையாகவே இருந்தேன். நீங்கள் மட்டுமே என்னை இன்முகத்தோடு வரவேற்று மந்திர தீட்சை எடுத்துக் கொள் வழி பிறக்கும் என்றீர்கள். நானும், அப்படியே செய்தேன். இன்று நான் புதிய மனிதனாக எதையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்தவனாக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்வது நாகரீகம் அல்ல. நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குவதே என் தகுதிக்கு ஏற்றது.
இப்படிக்கு,
அப்துல்வகாப்,
வாணியம்பாடி.
அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் மனைவி தீய ஆவிகளின் சேட்டையால், மிகவும் தொல்லை அடைந்து வந்தாள். அவளால் நான் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சமைக்க முடியாமலும், குழந்தைகளை பராமரிக்க முடியாமலும், வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்க முடியாமலும், ஒரு மனநோயாளியை போல இருந்த என் மனைவியை, உங்களிடம் நம்பிக்கையோடு மந்திர தீட்சை பெற்று, அவளுக்காகவே இரவும், பகலும் நீங்கள் சொன்னபடி ஜெபம் செய்து வந்தேன். இப்போது என் மனைவி ஆவிகளின் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விட்டாள். மந்திரவாதிகளால் சாதிக்க முடியாததை, உங்கள் மந்திர தீட்சை எனக்கு சாதித்து தந்துவிட்டது. உங்களை பல காலம் எல்லாம் வல்ல அல்லா வாழவைப்பான்.
இப்படிக்கு,
அபூபக்கர்,
சென்னை.
(பயன்பெற்றவர்களின் அனுபவ கடிதங்கள் இன்னும் தொடரும்...)
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும் தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம். கடிதம் அனுப்ப - sriramanandaguruji@gmail.com